Mar 28, 2011

நிழல்??



உலகில் எல்லோருக்கும்
ஒரு நிழல் தான்,
ஆனால், உனக்கு மட்டும் எப்படி
மூன்று நிழல்??
ஒன்று உன்னுடையது,
மற்ற இரண்டு நானும் என் நிழலும்!!



குழந்தையின் பசியறிந்து
உணவு ஊட்டும் தாய் போல,
என் மனப்பசியறிந்து
தினமும் எனக்கு
உன் காதலை ஊட்டுகிறாய்!!

Mar 21, 2011

ரயில் சினேகங்கள்!!!

அரக்க பரக்க ஓடிவந்து, மூச்சிரைக்க
ரயிலேறி,இடம் பார்த்து அமர்ந்து,
எதிரே இருப்பவரிடம் ஒரு ஹலோ சொல்லி,
நான் திருச்சிங்க, நீங்க?என ஊர் கதைகள் பேசி,
வாங்கும் திண்பண்டங்களை அவர்களோடு பகிர்ந்து உண்டு,
குழந்தைகள் படிப்பு, பள்ளி,
கல்லூரி செலவுகள், நாட்டுநடப்பு,
அரசியல்,சினிமா பேசி,
வேலைவாய்ப்பு பற்றி அரட்டை முடித்து,
பொழுது போய்,தூங்கி எழுந்து,
பல் விலக்கி,காபி குடித்து,
றுபடி
ஒரு குட்மார்னிங் சார்!! சொல்லி,
இரண்டு
நிமிட உரையாடல் பின்னர்,
இறங்க வேண்டிய இடம் வருமுன்
மூட்டை
முடிச்சை தயார் செய்து,
சரி
சார்.. அப்புறம் பார்க்கலாம்!!
என்றொரு பெரிய
சிரிப்புடன் முடிந்து போகும்,
நாம்
கடந்து செல்லும் ரயில் சினேகங்கள்!!

வறுமை!



 

வெட்கம்!!

கைகளால் உன் முகத்தை
நீ மறைத்தாலும்,
உன் கைகளின்
இடுக்கு வழியே வழிந்தோடியது
உன் வெட்கம்!!

Mar 17, 2011

காதல்!!!




பாறையில்
இருந்து
கசிந்து கொண்டே
இருக்கும் நீர் போல,
என்
மனதில் இருந்து
கசிந்து கொண்டே
இருக்கும்,
உன் மேல்
எனக்குள்ள காதல்!!!

Mar 3, 2011

மிச்சம் இருந்தது,,,,

நம் காதலை
கரைக்க நினைத்தேன்
என் கண்ணீரில்,
கண்ணீர்
கரைந்து காலியான 
பின்னும்
மிச்சம் இருந்தது
நம் காதல் மட்டுமே!!


காதலை கற்றுக்கொள்ள!


  இருக்க,
கடவுள்
காதலை
என்னை மட்டும்
கற்றுக்கொள்ள
சொன்னான்...,
பின்னர்
உன்னை
காதலை என்று!!
கற்றுக்கொடுத்தான்
தான் தெரிந்தது காதலிக்கவே
கற்றுக்கொள்ள
எவ்வுளவோ

உன்னையே சுற்ற!


ராட்டினம்
சுற்ற ஆசைப்படும்
குழந்தையை போல்,
என் மனம்
எப்போதும் உன்னையே
சுற்ற ஆசைப்படுகிறது
!!